இதே நாள் அன்று : புதிய இந்தியா பிறக்கிறது என்ற அறிவிப்பு என் அடி வயிற்றில் புளி கரைத்தது. மின்னலென வீட்டிற்கு வந்து எல்லா டப்பாக்களையும் ஆராய வைத்தது,. வேறெதற்கு சேமிப்பு வீணாக கூடாதென்ற ஆதங்கம்.
என் கண்மணியின் உண்டியல் பணம்தான் எங்களை வாழ வைத்தது , சில்லறை எவ்வளவு முக்கியம் என்று உணர வைத்தது. உழைத்த காசு உண்டியலில் இருந்த உணர்வு , வங்கியில் இருந்த சேமிப்பில் இல்லை. வாராக்கடன் மாதிரி ஒரு வித ஏக்கம்.
ஆயிரம் , ஐநூறு இருந்தும் ஐந்து, பத்து கொடுத்தவர் எல்லாம் உள்ளத்தில் உயர்ந்தோராயினர். Demonetization என்ற வார்த்தைக்கு டிக்ஷனரியை தேடிய நாள். பத்துநாளில் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று பாரத பிரதமர் அறிவித்த போது மனதில் இருந்த மகிழ்ச்சி, மறுதினத்திலிருந்து நாசமாய் போனது நாள்தோறும் நாளிதழ்களை பார்த்து அது சொல்லிய நிகழ்வுகள் பார்த்து.
எத்தனை நிகழ்வுகள் தள்ளி போனது இறப்பு தவிர. ரேஷன் அரிசிக்கு, இலவச வேஷ்டி சேலைக்கு வரிசையில் நின்ற உணர்வு நான் என் சொந்த பணத்தை எடுக்க வரிசையில் நின்ற போது உணர்த்தியது. ஒரு குழந்தையை பெற்றடுக்க பத்து மாசம் பட டயலாக் போல Demonetization என்ற வார்த்தை ஒரு யுகத்தை தாண்டியும் என் நினைவில் நீளும்.
No comments:
Post a Comment