Tuesday, November 14, 2017

என் மகள்

குறு குறு விழிகளோடு
விளையாட்டில் ரசனையோடு விளையாடி
கதைகள் சொல்ல காத்திருப்பாள் என் கண்மணி.

கற்பனை கதைகளை மட்டுமே
கேட்ட  என் காதுகளுக்கு - தன்
வகுப்பு நிஜக்கதைகளை சொல்ல
காத்திருப்பாள்  என் கண்மணி.

வீட்டிற்கு சென்றதுமே விளையாடலாம்
என்ற  நினைப்பு - ஆனால்
அவள் வயிறு  பசித்து காத்திருப்பதை
விழிகளில் சொல்வாள் என் கண்மணி.

சமைக்க ஆரம்பித்ததுமே  அம்மா
இன்னைக்கு என்ன நடந்துச்சின்னா ...
என்று என் பதிலை கூட கேட்காமலே
பதில் சொல்ல எத்தனிக்கும் அழகே அழகு.

செல்லமாய் நான் கோபித்தாலும்
அவள் கொஞ்சல் நடையில் என்
குணத்தை மாற்றுவாள் - என்னை
குயில் போல இசைக்க வைப்பாள்.

அப்பாவிடம் அன்பு காட்டுவதை
அம்மா கோபிப்பாளோ  என்று
செல்லமாய் சிணுங்கி கொண்டே 
நெருங்கி கட்டி அணைப்பாள்  முத்த
மழையில்  என்னை மூழ்க வைப்பாள்.

இப்படி என் செல்லத்தை
தங்கமே என்று கூப்பிட்டால் 
சேதாரம் எவ்வளவு என்பார்கள்
தமிழே என்று கூப்பிட்டால்
முத்தமிழில் எந்த தமிழ்  என்பார்கள் .
ஈடில்லா என் மகளை  எப்படி கூப்பிட்டாலும் 
அப்பொருளைவிட உயர்ந்தவள்
விலை மதிப்பற்றவள்.

1 comment: